திசையும் - திசைக்குரிய கோவில்களும்
உங்களின் நடப்பு திசைக்கு உரிய கோவிலை அறிந்து திசை
முடியும் காலம் வரை ஆண்டுக்கு 1 முறையாவது அந்த கோவிலுக்கு
சென்று வழிபடும் போது கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி பெருகும்.
திசையும் - திசைக்குரிய கோவில்களும்
.
1. கேது திசை நடந்தால் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட வேண்டும்.
2. சுக்கிர திசை நடந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.
3. சூரிய திசை நடந்தால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வழிபடவேண்டும்.
4. சந்திர திசை நடந்தால் திருமலை ஏழுமலையானை வழிபடவேண்டும்.
5. செவ்வாய் திசை நடந்தால் பழனி முருகனை வழிபடவேண்டும்.
6. இராகு திசை நடந்தால் காளகஸ்தி அப்பரை வழிபடவேண்டும்.
7. குரு திசை நடந்தால் திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.
8. சனி திசை நடந்தால் திருநள்ளாறு சனீஸ்வரபகவானை வழிபடவேண்டும்.
9. புதன் திசை நடந்தால் மங்களம் அருளும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடவேண்டும்.
சரியாக திசை அறிந்து ஆண்டுக்கு 1 முறையாவது வழிபட்டால் திசைக்குரிய கிரகத்தின்
சகல தோஷமும் அகன்று வாழ்க்கை சுகமாக அமையும்.
.

No comments