அஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017
அஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 Astrologer in erode,salem,coimbatore
என்ன சார் தனுசு ராசிக்கு இப்படி சொல்லிட்டீங்க..சிம்ம ராசியை கவுத்திட்டீங்க என்றெல்லாம் கேட்காதீர்கள்..சனி பெயர்ச்சி யின் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் இருந்து மாறாத கணக்கு.மீனம் ராசிக்கு அஷ்டம சனி நடந்த போது குழந்தைகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்..இப்போது மேச ராசிக்கு அஷ்டம சனி வந்திருக்கு .இவர்களும் அப்படி குழந்தைகளால் பிரச்சினை வரும்னு சொல்ல முடியாது...மருத்துவ செலவு,சொத்து பிரச்சினை வரும்...துலாம் ராசிக்கு ஜென்ம சனி முடிஞ்சிருச்சி..பாத சனி நடக்குது .போகும் பாதையில் கவனம் தேவை..வாகனம் காணாமல் போதல்,போகும் பாதையில் விபத்துக்களை சந்தித்தல் ,போகும் காரியம் தடையாகுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாக்கலாம்..
.
சனிப்பெயர்ச்சி வேறு குருப்பெயர்ச்சி வேறு இருப்பினும் குரு பெயர்ச்சி நன்றாக இருப்பின் ஓரளவு தப்பலாம்...சிம்மத்துக்கு சனியும் கைவிட்டு குருவும் கைவிட்டால் என்ன பலன் சொல்வது..? ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தியோ நடந்தால் யார் என்ன செய்ய முடியும்..?கும்பத்துக்கு 6ஆம் இட குரு நடக்குது..ஜக்கிரதை கை கால் கட்டு போடும் சூழல் வரலாம்..தேவையில்லாமல் வம்பு வழக்கில் சிக்க நேரலாம்..!!
கெடுதலை சொல்லிவிட்டால் இன்னும் ஜாக்கிரதையா இருப்பீங்கன்னு நம்பிக்கைதான் வெறும் பயமுறுத்தலோ உங்களை அனாவசியாமோ மன உளைச்சல் ஆக்கவோ எழுதவில்லை..ராத்திரி 12 மணிக்கு போன் செஞ்சி புலம்பினார் ஒருத்தர் கஷ்டமா இருந்துச்சு...சனியின் கணக்கு தனி கணக்கு அது கர்மா கணக்கு..அது நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லை..!!
ஆயிரம் கோயில் கும்பாபிசேகம் செய்த ஆட்சியாளராக இருந்தாலும் சிறைவாசம் அனுபவிச்சுதான் ஆகனும் சனியிடம்..அது தான் சனி பகவானுக்கு மக்கள் பயப்பட காரணம்!
ஜென்ம சனியை சந்திக்கப்போகும் விருச்சிகம் ராசியினர் குருபலம் இருக்கும்வரை அதாவது அடுத்த ஜூன் வரை சமாளிக்கலாம்..10 ஆம் இடத்து குரு பதவியை பறிக்கும் என்பது போல ஜென்ம சனியும் உலா வரப்போவதால் பதவிக்கு கூடுதல் ஆபத்துதான் முகத்தில் கர்ச்சீப் போடும் சூழ்நிலை அரசு அதிகாரிகளுக்கு வரலாம்...கணக்கு வழக்குகளில் கவனம் தேவை...ஜென்ம சனி இழக்க கூடாததை இழக்க செய்யும் ...ப்றிக்க கூடாதை பறிக்கும்..இதுவரை வராத பிரச்சினைகளெல்லாம் வந்து சேரும் ...சூரிய திசை நடந்தால் தந்தைக்கு கண்டம் சந்திரதிசை நடந்தால் அம்மாவுக்கும் உங்கள் உடலுக்கும் கண்டம்...சனி திசை நடந்தால் விபத்து கண்டம்....ராகு திசை நடந்தால் கீழான மனிதர்களால் பெரும் ஏமாற்றம் ,திருட்டால் இழப்பு போன்றவை உண்டாகலாம் கணவன் மனைவி பிரச்சினை பல மடங்கு அதிகரிக்கும்..ஜென்ம சனியை விருச்சிகம் ராசியினர் தாண்டி வருவதுதான் இப்போ மிக முக்கியம்..
.jpg)
No comments