Header Ads

  • Breaking News

    ஜாதகம் இல்லாதவர்களுக்கு - நீண்ட நாள் திருமணத்தடை அகன்று திருமணயோகம் தரும் வழிபாடு


    ஜாதகம் இல்லாதவர்களுக்கு
    .
    நீண்ட நாள் திருமணத்தடை அகன்று திருமணயோகம் தரும் வழிபாடு
    .
    ஜாதகம் இல்லாதவர்கள் திருமண யோகம் பெற அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை யோகநேரமாகிய மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரபகவானுக்கும் குரு பகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து மூலவராகிய சிவபெருமானையும் அம்பாளையும் 7 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் வழிபட திருமண யோகம் அமையும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும். நவகிரக மேடையில் தீபம் ஏற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் விளக்கை ஏற்றிக் கொள்ளவும் .
    .
    யோகநேரத்தில் வழிபடுவோம் யோகத்தில் வாழ்ந்திடுவோம்.
    வழிபாடு பெருகட்டும் வாழ்வு சிறக்கட்டும்.
    .
    வழிபாட்டுக் குறிப்புகள்
    .
    திருமண யோகம் பெரும் நபரே வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஆண் பெண் பேதமில்லை. அவர் கோவிலுக்குப் போக முடியாத நாட்களில் குடும்பத்தில் யாராவது ஒரு நபர் கோவிலுக்குச் சென்று வரலாம். யாருமே போக முடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில் நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
    .
    கோவிலுக்குப் போகமுடியாத நிலை
    .
    வழிபாட்டைத் தொடங்கும் குடும்பத்தில் யாராவது இறந்தால் மூன்று மாதமும் இரத்தச்சொந்தமுள்ளகுடும்பத்தில் யாராவது இறந்தால் 30 நாட்க்கள் கோவிலுக்கு போகக்கூடாது . மற்ற உறவினர்கள் என்றால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது ஊர் மாறி குடிபோகும் நிலை வந்தால் மட்டும் அங்கு அருகில் உள்ள கோவிலில் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொள்ளலாம். இரு கோவில் வாரங்களையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொண்டு வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728