Header Ads

  • Breaking News

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

    அவிட்டம் 3,4 பாதங்கள்,சதயம்,பூரட்டாதி,1,2,3 பாதங்கள் வரையில் உள்ள கும்ப ராசி நண்பர்களே..நீங்கள் எப்போதும் எதார்த்தமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு உண்மைகளை அப்படியே போட்டுடைக்கும் ரகம்..எல்லாமெ பாயிண்ட், பாயிண்டாக பேசுவீர்கள்..ஆன்மீக விசயத்தில் கரைத்து குடித்தவர் போல் பிரசங்கம் செய்வீர்கள்...பைனான்ஸ்,ஷேர் மார்க்கெட் என உங்களுக்கு தெரியாத விசயமே இல்லை என்பதுபோல எல்லா விசயத்திலும் டச் செய்து பேசுவதில் வல்லவர்...கும்பத்தான் இல்லாமல் கும்பாபிஷேகம் இல்லை எனும் அளவு கோயில் காரியங்களிலும் ,பொது தொண்டிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள்..ஆனால் உங்களை பிறர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதோடு முடிந்துவிடுகிறது உங்களுக்கு ஆதாயம் குறைவுதான்...திறமை இருக்கிறது ஆனால் அது பிறருக்குதான் பயன்படுகிறது...தனக்கு பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை...

    யாரிடமும் அளவோடு பேசுங்கள்..லூஸ்டாக் உங்கள் பலவீனம்...கடந்த வருடம் இதனால் பல அவமானம்,இழப்பு,அலைச்சல்களையும்,மருத்துவ செலவுகளையும் சந்தித்திருப்பீர்கள்..இதனால் சிலர் கடும் கடன் நெருக்கடியிலும் இருப்பீர்கள்...சிலர் சொத்துக்கள் விற்கும் நிலையும்,சிலர் வம்பு,வழக்கை சந்தித்த நிலையும் உண்டாகி இருக்கும்..இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த கதைதான் நடந்திருக்கும்...

    வருகிற 14.7.2015 முதல் உங்கள் ராசிக்கு குருபகவான் 7ஆம் இடத்துக்கு மாறுகிறார்..குருபலம் தொட்ங்க இருக்கிறது..இனி இந்த பாதிப்புகள் எல்லாமே விலகும்..உங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்..பகை விலகும்..வருமானம் அதிகரிக்கும்...சப்தம ஸ்தானத்துக்கு குருபகவான் வருவது ராஜயோகத்தை கொடுக்கும்...புகழ்,செல்வம்,செல்வாக்கு வசதிகள் ஏற்பட்டு மகத்தான வாழ்வு உண்டாகும்..கடன் தீரும்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு விரும்பியபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்...புதிய இடம்,வீடு,வாகனம் வாங்குவீர்கள்..வீடு கட்டும் யோகமும் ,நகைகள்,சொத்துக்கள் வாங்கும் நேரமும் நெருங்கியிருக்கிறது..வருமானம் அதிகமாகும்போது வசதி வாய்ப்புகள் அதிகரிக்கத்தானே செய்யும்.

    10ல் சனி வந்ததிலிருந்து வியாபாரத்துக்கு ,தொழிலுக்கு ,வேலைக்கு நல்ல வய்ப்புகள் தேடி வந்துவிட்டது..ஒரு சிலருக்கு வந்து கொண்டிருக்கிறது..குருவின் பார்வை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம்..அது குருவின் வீடாக இருப்பதால் சொந்த வீட்டை பார்க்கும் குரு இரட்டிப்பான லாபத்தையே கொடுப்பார்..பிள்ளைகள் உயர்கல்வியில் சேர்வர்...தந்தைக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.....உடல்நிலை பாதிப்பில் இருந்தவர்கள் மீள்வார்கள்....நல்ல ஆரோக்கியம் உண்டாகும்...

    9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான மூன்று மாத காலங்கள் குரு வக்ரகதியில் இயங்குவதால் ஆறாமிடத்தின் பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடும் நல்ல பலன்கள் நடக்காது இக்காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

    பரிகாரம்;திருச்செந்தூர் அல்லது திருப்பதி சென்று ரொம்ப நாள் ஆகியிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728