Header Ads

  • Breaking News

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

    குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

    வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்...

    இந்த குருபெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமாக அதிர்ஷ்டமாக இருக்கிறது...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு சுமாரான பலன்களும்,மிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு விசேஷமாக இல்லை என்பதும் குரு பெயர்ச்சியின் மேலோட்டமான பலனாகும்..

    துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி பலன்கள் கொடுக்கும் என பார்ப்போம்..

    சித்திரை 3,4ஆம் பதம்,சுவாதி,,விசாகம் 1,2,3 பதங்கள் வரையிலான துலாம் ராசி நண்பர்களே..கடந்த ஓராண்டாக பாத சனியாலும்,10 ஆம் இடத்து குருவாலும் படு சிரமங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள்..அலைச்சல்,காரிய தடை,தொழில் இட மாறுதல்,அதிக செலவுகள்,கடன் தொல்லை என கவலையும்,பயமுமாக கடந்த வருடம் போனது... சிலருக்கு குடும்பத்தில் பிரச்சினை,கணவன் ,மனைவி ஒற்றுமையில் சிக்கல் என இருந்திருக்கும் குழந்தைகளால் மருத்துவ செலவுகளும்,உறவினர்கள் பகை என்றும் அடுக்கடுக்கான பல சோதனைகளை சந்தித்திருப்பீர்கள்..

    இப்போது மாற இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் இதுவரை இருந்து வந்து விரய செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பு அதிகரிக்கும் கையில பணமே தங்கல...என்ற கவலை தீரும்...பல வழிகளிலும் வருமானம் வந்து சேரும் தொழில் சுறுசுறுப்படையும்... தொட்டதெல்லாம் தடங்கல் இன்றி முடியும்.

    முதல் ஆறு மாத காலங்கள் உங்களுக்கு என் காட்டுல மழை பெய்யுது என சந்தோச கூச்சல் போடும் அளவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதுங்க...இதுவரை பகையாக இருந்த சொந்தங்கள் நெருங்கி வருவர்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வீட்டில் ஆடம்பர பொருட்கள்,தங்கம் சேரும்...குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு திருமணம் விரும்பியபடி கூடி வரும்...சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அமோகமாக இருக்கும்..நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் சட்டுன்னு உங்களுக்கு சாதகமாக முடியும்,கோர்ட் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும்...

    உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் மருத்துவ செலவுகள் செய்து வந்தவர்களுக்கு இனி நல்ல ஆரோக்கியம் உண்டாகும் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அது போல உங்க ராசிக்கு குரு ராசிக்கு மூன்று,ஐந்து,ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இளைய சகோதரர்களால் ஆதாயம்,வீடு,வாகனம் வாங்கும் யோகம்,கணவன்,மனைவியால் யோகம்,ஆதாயம்,வருமானம் உண்டாகுதல்,தொழில் கூட்டாளியால் லாபம் உண்டாகுதல்,தொழில் அபிவிருத்தி ,புதிய தொழில் ஆரம்பித்தல் போன்ற நல்லவை எல்லாம் சுபமாக நடக்கப்போகிறது இறையருள் உங்களுக்கு துணையாக இருக்கும்..


    ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் இன்னும் பல யோகங்கள் உண்டாகும்..வீடு கட்டுதல்,வாங்குதல் நடக்கும்.. 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு பத்தாமிட குரு செயல்படுவார் ..அது உங்களுக்குசுமாரான காலம்...இக்காலத்தில் விரய செலவுகள்,கெட்ட செலவுகள் உண்டாகும்...வாகனங்களில் செல்கையில் கவனமாக செயல்படவும்...

    முதல் 6மாத காலங்கள்  இந்த குரு பெயர்ச்சி மிக யோகமாக செயல்படும்  செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728