யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ?
பொதுவாக திருமணம் செய்துகொள்வதற்கு வது வரன் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, அவர்களது ஜாதக ரீதியாக கவனிக்க பட வேண்டிய சில விஷயங்கள் கிழ்கண்டவாறு அமையும்.
1) ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று அமைவது தம்பதியரின் குடும்ப வாழ்க்கையில் நல்ல வருமான வாய்ப்புகளையும், பொருளாதார வசதிகளையும் வாரி வழங்கும், தம்பதியரின் ஒருமித்த கருத்துகளை புரிந்துகொள்ளும் வல்லமையை தரும்,
ஒருவர் நினைப்பதை குறிப்பால் உணர்ந்து குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தும் யோகத்தை தரும்,
இருவரின் பேச்சிலும் இனிமை மேலோங்கும், வெறுப்பு கலந்த வார்த்தைகள் அல்லது வீண் விவாதங்களுக்கு இடமளிக்காமல், குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ளோரையும் அனுசரித்து செல்லும் சிறப்பான வாழ்க்கையை தரும்,
மேலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.
2) குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தனது சந்ததிக்கு நல்ல வாரிசை பெற்று தரும், எனவே 5ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது அவசியமாகும் மேலும் சிறப்பாக கவனிக்க வேண்டிய பாவகமாக 5ம் பாவகத்தை கருதலாம், தம்பதியருக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் இறை அருளின் கருணையினால், தன்பதியரை பிரிவு என்ற நிலைக்கு தள்ளாமல், பெரியோர்களின் ஆசியுடன் நீண்ட நெடுங்காலம் சிறப்பாக வாழ இந்த பாவகம் துணை புரியும்.
3) கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து செல்லும் இனிய வாழ்க்கையை வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் என்பதால், இந்த 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது சிறப்பு,
மேலும் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது திருமண வாழ்க்கையின் வெற்றியை, பொருத்தம் காணும் பொழுதே உறுதி செய்துவிடும்.
4) கணவன் வழியில் இருந்து மனைவியும், மனைவி வழியில் இருந்து கணவனும் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்வது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவகம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் 8ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பு, மேலும் இருவரது ஆயுள் பலத்தையும் விருத்தி செய்யும் என்பதால் இந்த பாவக வழிமையை பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம், மேலும் இந்த ஆயுள் பாவகம் 1,6,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது தம்பதியரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.
5) ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஏனெனில், தம்பதியரின் கெளரவம் அந்தஸ்து மற்றும் சமுதாயம் மதிக்கும் வழியில் வாழும் யோக வாழ்க்கையை வாரி வழங்குவது ஜீவன ஸ்தானம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சகல நிலைகளில் இருந்தும் யோகத்தை தரும்,
கௌரவம் குறையாத,
கருத்து வேறுபாடற்ற, மணவாழ்க்கையில் பிரிவு நிலையை தாராத தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும்,
மேலும் ஜீவன ஸ்தானம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.
1) குடும்ப ஸ்தானம் 6ம் வீட்டுடன் தொடர்பு அடிப்படையில் குடும்ப ஸ்தானம் பாதிப்படைந்திருக்கிறது,
2) பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும்
5ம் பாவகம்
6ம் வீட்டுடன் தொடர்பு, குழந்தை பாக்கிய அமைப்பில் ஆண் வாரிசு கேள்விக்குறியாக மாற வாய்ப்புகள் அதிகம்.
3) களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், பெறுவது திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை குறிக்கிறது.
4) ஆயுள் பாவகமான 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, இந்த ஜாதகியை மனம் செய்து கொள்பவருக்கு மன நிம்மதி என்பது கேள்வி குறி?
மேலும் வீண் விரையங்களையும் இழப்புகளையும் தவிர்க்க இயலாது.
5) நடைபெறும் சந்திரன் திசை பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் எதிரி ஸ்தானமான
6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது மிகுந்த இன்னல்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தரும்.
No comments